என் மலர்
இந்தியா

இந்திரா காந்தி பிறந்த தினம்: நினைவிடத்தில் சோனியா, கார்கே, ராகுல் காந்தி மரியாதை
- தன்னிறைவு, உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி நாட்டை வழி நடத்தினார்.
- அவரது துணிச்சலான தலைமையும், நீதி, ஒற்றுமை, அர்ப்பணிப்பு காங்கிரஸ் முன்னோக்கி செல்வதற்கு வழி காட்டுகின்றன
இந்தியாவின் முதல் பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் பிறந்த தினம் இன்று. இதனைத் தொடர்ந்து அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
சக்தியின் உருவகமாக, இந்திரா காந்தி ஏராளமான புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொண்ட போதும், தன்னிறைவு, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மேம்பட்ட உலகளாவிய நிலைப்பாட்டை நோக்கி நாட்டை வழி நடத்தினார்.
அவரது துணிச்சலான தலைமையும், நீதி, ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கான தீவிர அர்ப்பணிப்பும் காங்கிரஸ் முன்னோக்கி செல்வதற்கு வழி காட்டுகின்றன என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
Next Story






