என் மலர்tooltip icon

    இந்தியா

    டீ கடையில் திருட சென்ற சிறுவன்- மின்சாரம் தாக்கி பலி
    X

    டீ கடையில் திருட சென்ற சிறுவன்- மின்சாரம் தாக்கி பலி

    • கடை திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், லிங்கங்குண்டலா பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா (வயது 13).

    குண்டூர் கலெக்டர் அலுவலகம் அருகே டீ கடை ஒன்று உள்ளது.

    நேற்று இரவு டீக்கடை உரிமையாளர் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி சென்றார்.

    மணிகண்டா நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். டீக்கடையில் இருந்த பொருட்களை திருடிக் கொண்டு இருந்தார்.

    அப்போது வெளிச்சம் இல்லாததால் டீக்கடையில் இருந்த மின் விளக்கின் சுவிட்ச் போட்டு உள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மணிகண்டா மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். நேற்று காலை டீக்கடை உரிமையாளர் கடையை திறக்க வந்தார். கடை திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது மணிகண்டா மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×