

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, பத்தினம் திட்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை கொட்டுகிறது.
பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு பொதுமக்களை மீட்டு வருகின்றனர். மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், காசர்கோடு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அலுவலகம் இடிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
தினமும் குறைந்தது 10 பேர் இந்த அலுவலகத்தில் கேரம் விளையாட வரும் நிலையில், விபத்து அன்று யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
കാസർകോഡ് കനത്ത മഴയില് ധര്മ്മത്തട്ക്കയില് സിപിഎം ഓഫീസ് തകര്ന്ന് വീണു.. ??♂️ഇവന്മാരുടെ പാർട്ടി ആപ്പീസും ഊരാളുങ്കൽ ആണോ കെട്ടുന്നത് ?? pic.twitter.com/xgTeLpQcuF