என் மலர்
இந்தியா

காரில் வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை.. நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம்
- மூன்று பெண்களும் ஒரு சிறுமியும் காரில் சென்று கொண்டிருந்தனர்.
- வலுக்கட்டாயமாக அவர்களின் உடலில் இருந்து தங்க நகைகளைப் பறித்தனர்.
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் காரில் சென்ற சிறுமியை கொள்ளையடித்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் திங்கள்கிழமை அதிகாலை 4:15 மணிக்கு புனே மாவட்டத்தில் உள்ள பிக்வான் அருகே நடந்தது.
மூன்று பெண்களும் ஒரு சிறுமியும் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் சில நெடுஞ்சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தினார்.
ஓட்டுநர் காரில் இருந்து இறங்கியவுடன், அடையாளம் தெரியாத இரண்டு ஆண்கள் அங்கு வந்தனர். அவர்கள் நேராக காருக்கு வந்து ஆயுதங்களைக் காட்டி உள்ளே இருந்த பெண்களை மிரட்டினர். அவர்கள் வலுக்கட்டாயமாக அவர்களின் உடலில் இருந்து தங்க நகைகளைப் பறித்தனர்.
நகைகளைத் திருடிய பிறகு அந்த நபர்களின் ஒருவன், காரில் இருந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தான். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






