என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
![கடினமான முடிவு எடுக்க தயங்க மாட்டோம்: ஜெய்ராம் ரமேஷ் கடினமான முடிவு எடுக்க தயங்க மாட்டோம்: ஜெய்ராம் ரமேஷ்](https://media.maalaimalar.com/h-upload/2022/11/28/1798581-jairam-ramesh.webp)
கடினமான முடிவு எடுக்க தயங்க மாட்டோம்: ஜெய்ராம் ரமேஷ்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகிய இருவருமே எங்களுக்கு தேவை.
- டிசம்பர் 4-ந் தேதி, ராஜஸ்தானில் பாதயாத்திரை நுழைகிறது.
இந்தூர் :
ராஜஸ்தானில், அசோக் கெலாட்டை முதல்-மந்திரியாக கொண்ட காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
அசோக் கெலாட் சமீபத்தில் அளித்த பேட்டியில், சச்சின் பைலட் ஒரு துரோகி, அவர் முதல்-மந்திரி ஆக முடியாது என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். அதற்கு சச்சின் பைலட், ''அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளையும், இழிவான சொற்களையும் பயன்படுத்துவது ஒரு மூத்த தலைவருக்கு அழகல்ல'' என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் ராகுல்காந்தி பாதயாத்திரைக்கிடையே காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி அமைப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம். அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகிய இருவருமே எங்களுக்கு தேவை. அசோக் கெலாட் சில குறிப்பிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கக்கூடாது.
இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண காங்கிரஸ் தலைமை பரிசீலித்து வருகிறது. அதற்கு காலவரையறை நிர்ணயிக்க முடியாது. காங்கிரஸ் தலைமைதான் காலவரையறை நிர்ணயிக்கும்.
ராஜஸ்தான் பிரச்சினையில், கட்சியை வலுப்படுத்தக்கூடிய முடிவை எடுப்போம். ஒருவேளை கடினமான முடிவு எடுக்க வேண்டி இருந்தால், அதை எடுக்க காங்கிரஸ் தயங்காது. ஒருவேளை இரு அணிகளுக்கு இடையே சமரசம் உருவாக்குவதாக இருந்தால், அதையும் செய்வோம்.
டிசம்பர் 4-ந் தேதி, ராஜஸ்தானில் பாதயாத்திரை நுழைகிறது. மற்ற மாநிலங்களைப் போல் அங்கும் பாதயாத்திரை வெற்றி பெறும்.
பொது சிவில் சட்டம் குறித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் விவாதம் நடக்க வேண்டும். ஆனால், குஜராத் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக, இத்தகைய பிரித்தாளும் பிரச்சினையை பா.ஜனதா எழுப்புகிறது. தேர்தலுக்கு பிறகு அதை மறந்து விடும். குஜராத்தில் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. கீழ்மட்டத்தில் ஆம் ஆத்மி பலமாக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)