search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் ஏக்நாத் ஷிண்டே கடிதம்
    X

    சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் ஏக்நாத் ஷிண்டே கடிதம்

    • சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆட்சியை அமைத்துள்ளனர்.
    • கேவியட் மனுவை உத்தவ் தாக்கரே தரப்பு அளித்துள்ளது.

    மும்பை :

    சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி, மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆகிய இருவரும் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது.

    சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பாஜகவுடன் இணைந்து ஆட்சியை அமைத்துள்ளனர்.

    முன்னதாக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி குழுவை சிவசேனாவாக அங்கீகரிக்கக் கூடாது என்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றும், இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் போது தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று கேவியட் மனுவையும் உத்தவ் தாக்கரே தரப்பு அளித்துள்ளது.

    இந்நிலையில், 12 சிவசேனா எம்.பி.க்கள் சேர்ந்து தங்களை தனியாகச் செயல்பட அங்கீகரிக்குமாறு , மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் தனியாக மனு அளித்து உள்ளனர். இதனையடுத்து, சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு கடிதம் எழுதியுள்ளது.

    Next Story
    ×