search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராமர் கோவில் விவகாரத்தில் கட்சி எடுத்த முடிவு பொருத்தமற்றது: திக்விஜய் சிங் சகோதரர் காட்டம்
    X

    ராமர் கோவில் விவகாரத்தில் கட்சி எடுத்த முடிவு பொருத்தமற்றது: திக்விஜய் சிங் சகோதரர் காட்டம்

    • விழாவில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • ராமர் கோவில் திறப்பு விழாவில் காஙகிரஸ் பங்கேற்காது என அக்கட்சி அறிவித்துள்ளது.

    போபால்:

    உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முன்னாள் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ராமர் கோவில் திறப்பு விழா பாஜக-ஆர்எஸ்எஸ் நிகழ்வு. இந்த விழா தேர்தல் நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது என்பதால் காஙகிரஸ் பங்கேற்காது என அக்கட்சி அறிவித்துள்ளது. இதற்கு அக்கட்சியில் இருந்தே பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய் சிங்கின் சகோதரர் லக்ஷ்மண் சிங், அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் கட்சி எடுத்த முடிவு பொருத்தமற்றது. இந்த முடிவின் எதிரொலி தேர்தலில் தெரியும் என காட்டமாக விமர்சித்துள்ளார்.

    மேலும், அனைவரும் அயோத்திக்குச் செல்ல வேண்டும். நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் அங்கு செல்வோம். எங்கள் பக்தி ராமர் மீது உள்ளது என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×