search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜனதாவுக்கு எதிராக வாக்களித்து உங்கள் கோபத்தை வெளிப்படுத்துங்கள்: கெஜ்ரிவால்
    X

    பா.ஜனதாவுக்கு எதிராக வாக்களித்து உங்கள் கோபத்தை வெளிப்படுத்துங்கள்: கெஜ்ரிவால்

    • தேர்தல் வரும் நிலையில் சிஏஏ-வை அமல்படுத்தியது மோசமான வாக்கு வங்கி அரசியல்.
    • மொத்த நாடும் சிஏஏ சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கோருகிறது.

    இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக நேற்று முன்தினம் மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. அதற்கான விதிகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு, விண்ணப்பிப்பதற்கான இணைய தளத்தையும் உருவாக்கியுள்ளது.

    சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள், 3 மாதம் ஆகிய நிலையில் தற்போது அமல்படுத்துவது ஏன்? என மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. தேர்தலுக்காக இதை கொண்டு வந்துள்ளது எனத் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா ஆகிய 3 மாநிலங்கள் செயல்படுத்தமாட்டோம் என அறிவித்துள்ளன.

    இந்த நிலையில் டெல்லி மாநில முதல்வரும், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜனதாவின் மோசமான வாக்கு வங்கி அரசியல் எனத் தெரிவித்துள்ளார்.3

    இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    சிஏஏ என்றால் என்ன? வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வந்து குடியேறி, அவர்கள் இந்திய குடியுரிமை பெற விரும்பினால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    அதனுடைய அர்த்தம் அதிகப்படியான சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வருவார்கள் என்பதுதான். அவர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள். அவர்களுக்காக வீடுகள் கட்டி கொடுக்கப்படும். பா.ஜனதாவால் நம்முடைய குழந்தைகளுக்கு வேலை வழங்க முடியாது.

    ஆனால், பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களின் குழந்தைகளுக்கு வேலை வழங்க விரும்புகிறார்கள். நம்முடைய ஏராளமான மக்கள் வீடுகள் இல்லாமல் தவிக்கிறார்கள். ஆனால், பாகிஸ்தானில் இருந்து இங்கே வந்தவர்களுக்கு பா.ஜனதா வீடுகள் வழங்க விரும்புகிறது. நம்முடைய வேலை வாய்ப்பை அவர்களுடைய குழந்தைகளுக்கு வழங்க விரும்புகிறார்கள். பாகிஸ்தானில் இருந்து வந்து இந்தியா வந்து குடியேறிவர்களை நமது உரிமையான வீடுகள் குடியமர்த்த விரும்புகிறார்கள்.

    நமது குடும்பங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டிய இந்திய அரசின் பணம் பாகிஸ்தானில் இருந்து வந்து குடியேறியவர்களுக்கு பயன்படுத்தப்படும்.

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் நாடுகளில் இருந்து, அந்த நாடுகளில் சிறுபான்மையினராக கருதப்படும் நபர்கள் சுமார் 3.5 கோடி பேர் இந்தியாவில் வந்து தங்கியுள்ளனர். இங்கு வந்து குடியேறிவர்களுக்கு வீடுகள் வழங்கவும், வேலைவாய்ப்புக்காகவும் நம்முடைய மக்கள் பணத்தை செலவழிக்க பா.ஜனதா விரும்புகிறது.

    வரும் தேர்தலில் இந்த மூன்று நாடுகளில் இருந்து இந்தியா வந்து குடியேறிவர்கள், வாக்கு வங்கியாக மாறுவதால் பா.ஜனதாவுக்கு ஆதாயம் கிடைக்கும். தேர்தல் வரும் நிலையில் சிஏஏ-வை அமல்படுத்தியது மோசமான வாக்கு வங்கி அரசியல். மொத்த நாடும் சிஏஏ சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கோருகிறது. சட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால், மக்கள் பா.ஜனதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.

    நாட்டின் ஒடுத்த மொத்த மக்களும் சிஏஏ சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என விரும்புகிறார்கள். மக்கள் பா.ஜனதாவுக்கு எதிரான அவர்களது கோபத்தை மக்களவை தேர்தலில் அதற்கு எதிராக வாக்களித்து வெளிப்படுத்த வேணடும்.

    இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    Next Story
    ×