என் மலர்
இந்தியா

ஒருநாள் கூத்துக்கு ரூ.40 லட்சம் செலவு! இணையத்தில் பேசுபொருளாகிய மணிக்கூண்டு
- புகைப்படம் இணையத்தில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது.
- மணிக்கூண்டு செயல்படாமல் போனதற்கு திட்ட இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
பீகாரில் ஸ்மாா்ட் சிட்டி திட்டதின் கீழ் புதிதாக பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அங்குள்ள ஷெரீப் நகரில் கான்கிரீட் மணிக்கூண்டு ஒன்று சுமார் ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த விழாவில் பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் அங்கு சென்று இந்த மணிக்கூண்டை தொடங்கி வைத்தார்.
இந்தநிலையில் அந்த மணிக்கூண்டில் இருந்த கடிகாரம் செயல்படாமல் நின்றது. இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது. இதில் 'ஒருநாள் கூத்துக்கு ரூ.40 லட்சம் செலவு!' என தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மணிக்கூண்டு செயல்படாமல் போனதற்கு திட்ட இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். 'அதாவது அந்த நள்ளிரவில் மணிக்கூண்டுக்குள் மர்ம ஆசாமிகள் புகுந்து கேபிள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுவிட்டதாகவும், மணிக்கூண்டு கட்டுவதற்கு ஆன செலவு இதுவரை கணக்கிடப்படவில்லை' எனவும் கூறினார். இதனை அடுத்து பயனர்கள் 'ஏதோ! திறந்த ஒரேநாளில் திருட்டு நடந்துவிட்டதா? காதில் பூ சுற்றுகிறார்களா?' என வலைத்தளவாசிகள் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.






