search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ஜூன் 11-ந்தேதி வி.கே. பாண்டியனை தமிழ்நாட்டிற்கு அனுப்புவோம்: அசாம் மாநிலம் முதல்வர் சொல்கிறார்
    X

    ஜூன் 11-ந்தேதி வி.கே. பாண்டியனை தமிழ்நாட்டிற்கு அனுப்புவோம்: அசாம் மாநிலம் முதல்வர் சொல்கிறார்

    • ஒடிசாவில் நடைபெற்ற முதல் மூன்று கட்ட தேர்தலில் பா.ஜனதா ஏறக்குறைய மெஜாரிட்டியை பெற்றுள்ளது.
    • பா.ஜனதா அரசு ஜூன் 10-ந்தேதி பதவி ஏற்கும். நவீன் பட்நாயக்கிற்கு வலது கையாக திகழும் 5T சேர்மன் வி.கே. பாண்டியனை தமிழ்நாட்டிற்கு அனுப்புவோம்.

    ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும், மக்களவை தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. அங்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை மூன்று கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 4வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் ஒடிசாவில் ஜூன் 10-ந்தேதி பா.ஜனதா பதவி ஏற்கும். ஜூன் 11-ந்தேதி நாங்கள் பி.கே. பாண்டியனை தமிழ்நாட்டிற்கு அனுப்புவோம் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    என்னுடைய கணிப்பின்படி, ஒடிசாவில் நடைபெற்ற முதல் மூன்று கட்ட தேர்தலில் பா.ஜனதா ஏறக்குறைய மெஜாரிட்டியை பெற்றுள்ளது. ஆட்சியமைக்க இன்னும் ஒருசில இடங்கள்தான் தேவை. ஜூன் 1-ந்தேதி அதுவும் நிரப்பப்படும்.

    பா.ஜனதா அரசு ஜூன் 10-ந்தேதி பதவி ஏற்கும். நவீன் பட்நாயக்கிற்கு வலது கையாக திகழும் 5T சேர்மன் வி.கே. பாண்டியனை தமிழ்நாட்டிற்கு அனுப்புவோம்.

    இன்று, ஒடிசா இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் வெளி மாநிலத்திற்கு புலம்பெயர்ந்து செல்கிறார்கள். மற்றொரு பக்கம் ஒரு லட்சம் அரசு வேலைகள் காலியாக உள்ளது. ஒடிசா இளைஞர்கள் உள்ளூர் தொழிற்சாலைகளில் வேலை செய்யவில்லை. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஒரு வருடத்திற்குள் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும்.

    பிஜு ஜனதா தளத்தின் 5T-ல் ஒரு T-ன் அர்த்தம் டீம் ஒர்க். ஒடிசாவில் ஏதாவது டீம் ஒர்க் நடைபெறுகிறதா?. தேர்வான எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்கள், மந்திரிகள் அவர்களுடைய அதிகாரத்தை செயல்படுத்த முடியவில்லை. அங்கு ஒரே ஒரு டீம்தான் உள்ளது. பாண்டியன் மற்றும் பாண்டியன் மனைவிக்கு இடையிலான ஒரு T. அது தமிழ்நாட்டை குறிக்கும்.

    ஒடிசாவில் கேபினட் அமைச்சர்கள் அல்லது எந்த அதிகாரிகளும் அதிகாரத்தை பெறவில்லை. பாண்டியன் மற்றும் பாண்டியன் மனைவி ஆகிய இரண்டு பேரும் அனைத்து அதிகாரத்தையும் கொண்டுள்ளனர். நவீன் பட்நாயக்கை பாண்டியன் பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர். ஒடிசா மக்களின் மரியாதை பெற அவர் அதில் இருந்து வெளியே வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×