search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சபாநாயகர் மீது காகித வீச்சு- ஆம் ஆத்மி எம்.பி ரிங்கு மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம்
    X

    சபாநாயகர் மீது காகித வீச்சு- ஆம் ஆத்மி எம்.பி ரிங்கு மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம்

    • ரிங்குவின் நடத்தைக்கு ஆட்சேபித்து, இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றம்.
    • மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ம் தேதியுடன் முடிவடைகிறது.

    பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை உறுப்பினர் சுசில் குமார் ரிங்கு நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    மக்களவையில் கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டதற்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி உறுப்பினர் சுஷில் குமார் ரின்குவை மழைக்கால கூட்டத்தொடர் முழுவதற்கும் மக்களவை இடைநீக்கம் செய்துள்ளது.

    மக்களவை டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா நிறைவேற்றியதால், அவையின் நடுபகுதிக்கு வந்த ரிங்கு காகிதங்களை கிழித்து சபாநாயகர் ஓம் பிர்லா மீது வீசினார்.

    மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, பிர்லா அவையில் நடந்த ரிங்குவின் நடத்தைக்கு ஆட்சேபித்து, ஆம் ஆத்மி உறுப்பினரை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை முன்வைக்க பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் கேட்டார்.

    மக்களவை உறுப்பினர் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக பிர்லா, ரிங்குவை முறையாகப் பெயரிட்டார். அதைத் தொடர்ந்து மழைக்கால அமர்வின் மீதமுள்ள கூட்டத்திற்கு அவரை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அமைச்சர் முன்வைத்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஆம் ஆத்மியின் மக்களவை உறுப்பினர் ரிங்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×