என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பிறந்து சில நாட்களில் 2 குழந்தைகளை கொன்ற தாய்
- கதவை திறக்க கோரி நீண்ட நேரம் சத்தமிட்டும் கதவு திறக்கவில்லை.
- குழந்தை கழுத்தை இறுக்கி கொலை செய்யபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நந்தியாலா காந்தி நகரை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி ஷன்னூபி. இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த ஆண்டு ஷன்னூபிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 19-வது நாளில் இறந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி மீண்டும் ஷன்னூபிக்கு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் காலை மகேஷ் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் மகேஷின் தாய் மற்றும் தங்கைகள் இருந்தனர்.
அப்போது ஷன்னூபியின் அறையில் இருந்து குழந்தை அலறல் சத்தம் கேட்டது. இதனால் பதறிப்போன மகேஷின் தாய் மற்றும் தங்கைகள் ஷன்னூபியின் அறைக்கு சென்று பார்த்தபோது அறை கதவு உள் பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது.
கதவை திறக்க கோரி நீண்ட நேரம் சத்தமிட்டும் கதவு திறக்கவில்லை. இதனையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது குழந்தை கழுத்தில் இருந்து ரத்தம் வழிந்தபடி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தான்.
குழந்தையை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் குழந்தை கழுத்தை இறுக்கி கொலை செய்யபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மகேஷின் தாய் போலீசில் புகார் செய்தார் போலீசார் ஷன்னூயை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த ஆண்டு பிறந்த பெண் குழந்தை மற்றும் இந்த குழந்தையும் ஷன்னூபி கழுத்தை நெரித்து கொலை செய்ததும். மேலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை முடிந்த பிறகு விசாரணை நடத்தி கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்