search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    9 ஆண்டுகள் தனிமை வாழ்க்கை: ஓட்டல் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
    X

    9 ஆண்டுகள் தனிமை வாழ்க்கை: ஓட்டல் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

    • ஓட்டல் அதிபரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
    • போலீசார் இந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் ஹீராநகர் பகுதியில் வசித்து வந்தவர் சித்து ( வயது 30) ஓட்டல் அதிபரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தனிமையில் வாடி வந்தார். இதனால் அவருக்கு மன அழுத்தமும் ஏற்பட்டது. நேற்று இவர் தனது வீட்டில் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவர் 7 பக்க உருக்கமான கடிதம் எழுதி இருந்தார். அதில் தான் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் தனிமையில் வாழ்ந்து வந்ததால் இந்த முடிவை மேற்கொண்ட தாகவும் எழுதி உள்ளார். போலீசார் இந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×