என் மலர்
இந்தியா

மாநிலங்களவையில் தாக்கல்: வக்பு வாரியத்தின் கீழ் 2004-ல் 4.9 லட்சம் சொத்துகள், இன்று 8.72 லட்சம் சொத்துகள்- கிரண் ரிஜிஜு
- வக்பு வாரியம் வக்பு சொத்துக்களை நிர்வகிக்காது, மேற்பார்வையிட மட்டுமே செய்யும்.
- திருத்தப்பட்ட வக்பு மசோதா பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்.
பாராளுமன்ற மக்களவையில் நேற்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். மேலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தர வேண்டும் எனக் கோரினார்.
தாக்கல் செய்து கிரண் ரிஜிஜு பேசியதாவது:-
* வக்பு வாரியத்தின் கீழ் 2004-ல் 4.9 லட்சம் சொத்துகள் இருந்தனர். இன்று 8.72 லட்சம் சொத்துகள் உள்ளன.
* முந்தைய அரசுகளின் நிறைவேற்றப்படாத பணிகளை நிறைவேற்றுவதே வக்பு மசோதாவின் நோக்கமாகும்.
* நாங்கள் யாருடைய மத உணர்வையும் புண்படுத்த விரும்பவில்லை.
* வக்பு வாரியம் வக்பு சொத்துக்களை நிர்வகிக்காது, மேற்பார்வையிட மட்டுமே செய்யும்.
* திருத்தப்பட்ட வக்பு மசோதா பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்.
* வக்பு மசோதா கோடிக்கணக்கான ஏழை முஸ்லிம்களுக்கு பயனளிக்கும், வக்ஃப் சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும்.
இவ்வாறு கிரிண் ரிஜிஜு தெரிவித்தார்.






