என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: தினசரி ரூ.612 ஊதியம் - 187 பணியிடங்களுக்காக விமான ஓடுதளத்தில் தேர்வெழுதிய 8,000 பேர்
    X

    VIDEO: தினசரி ரூ.612 ஊதியம் - 187 பணியிடங்களுக்காக விமான ஓடுதளத்தில் தேர்வெழுதிய 8,000 பேர்

    • இந்த பணியில் சேர 5 ஆம் வகுப்பு வரை படிந்திருந்தாலே போதும்.
    • இந்த தேர்வு எழுதிய பலரும் பட்டதாரிகள் ஆவார்

    இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை என்ற பிரச்சனை நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலான வேலைகளுக்கு எண்ணற்றோர் விண்ணப்பிப்பது தற்போது பேசுபொருளாகி வருகிறது.

    அவ்வகையில் ஒடிசாவில் 187 ஊர்க்காவல் படை பணியிடங்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிகப் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் இதனை பேர்களுக்கு தேர்வு அரை ஒதுக்க முடியாமல் விமான ஓடுதளத்தில் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

    விமான ஓடுதளத்தில் அமர்ந்து கிட்டத்தட்ட 8,000 பேர் தேர்வெழுதினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    ஊர்க்காவல் படை பணிக்குத் தினசரி ரூ.612 ஊதியம் வழங்கப்படுவதாகவும், இது மாதத்திற்கு சுமார் ரூ.18,360 ஆக வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பணியில் சேர 5 ஆம் வகுப்பு வரை படிந்திருந்தாலே போதும். ஆனால் தேர்வு எழுதிய பலரும் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×