search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திரிபுராவில் பரபரப்பு - ஜே.பி.நட்டா பேரணியில் பங்கேற்க சென்ற பா.ஜ.க.வினர் மீது தாக்குதல்
    X

    பாஜக

    திரிபுராவில் பரபரப்பு - ஜே.பி.நட்டா பேரணியில் பங்கேற்க சென்ற பா.ஜ.க.வினர் மீது தாக்குதல்

    • திரிபுராவில் ஜே.பி. நட்டா தலைமையில் பேரணி நடைபெற்றது.
    • இதில் பங்கேற்க சென்ற பா.ஜ.க.வினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    அகர்தலா:

    திரிபுரா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.

    இதற்கிடையே, திரிபுராவின் மேற்கு மாவட்டமான குமுல்வங்கில் நேற்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் பிரசார பேரணி நடைபெற்றது.

    இந்நிலையில், பேரணியில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த பா.ஜ.க. தொண்டர்கள் மீது மர்ம நபர்கள் சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் பா.ஜ.க தொண்டர்கள் 40 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பா.ஜ.க. தொண்டர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மாநில முதல் மந்திரி மாணிக் சாஹா, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

    Next Story
    ×