என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
தேர்வு எழுதிய மாணவி தலையில் விழுந்த மின்விசிறி- அரசு பள்ளியில் விபரீதம்
Byமாலை மலர்4 May 2022 7:44 AM GMT (Updated: 4 May 2022 8:46 AM GMT)
ஆந்திராவில் தேர்வு எழுதிய மாணவி தலையில் மின்விசிறி விழுந்ததைக் கண்ட ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நேற்று முன்தினம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்துகொண்டு இருந்தது.
அப்போது பள்ளி வகுப்பறையில் ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி திடீரென கழன்று தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவியின் தலையில் விழுந்தது.
இதனால் மாணவியின் தலையில் காயம் ஏற்பட்டு வலியால் அலறி துடித்தார்.மாணவியின் தலையில் மின்விசிறி விழுந்ததைக் கண்ட ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவரை அழைத்து வந்து பள்ளியிலேயே மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தேர்வு தொடங்குவதற்கு 2 நாட்கள் முன்பு மாணவர்கள் தேர்வு எழுதும் அறைகள் பராமரிப்பு பணிகள் நடந்தது. துரதிஷ்டவசமாக மின்விசிறி கழன்று மாணவியின் தலையில் விழுந்துள்ளது என தெரிவித்தார்.
இந்த சம்பவம் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X