என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகள் எதிர்ப்பால் மோடி அரசு பின்வாங்குவது இது 2-வது தடவை
Byமாலை மலர்20 Nov 2021 2:29 AM GMT (Updated: 20 Nov 2021 2:29 AM GMT)
கடந்த 2014-ம் ஆண்டு, முதல்முறையாக மோடி ஆட்சிக்கு வந்தபோதே முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 9 முக்கிய திருத்தங்களை கொண்டு வந்து, அதை அவசர சட்டமாக பிறப்பித்தது.
புதுடெல்லி :
விவசாயிகளின் ஓராண்டு கால எதிர்ப்புக்கிடையே, வேளாண் சட்டங்களை ரத்துசெய்வதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது, பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், விவசாயிகள் எதிர்ப்பால் மோடி அரசு பின்வாங்குவது இது முதல்முறை அல்ல.
கடந்த 2014-ம் ஆண்டு, முதல்முறையாக மோடி ஆட்சிக்கு வந்தபோதே முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 9 முக்கிய திருத்தங்களை கொண்டு வந்து, அதை அவசர சட்டமாக பிறப்பித்தது.
வேளாண் சட்டங்களுக்கு எழுந்த எதிர்ப்பை போலவே, இந்த அவசர சட்டத்துக்கும் அப்போது எதிர்ப்பு எழுந்தது. ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பு உள்பட பெரும்பாலான விவசாய சங்கங்கள், இது விவசாயிகள் நலனுக்கு எதிரானது என்று கூறி, எதிர்ப்பு தெரிவித்தன.
அப்போதைய கூட்டணி கட்சிகளான சிவசேனா, அகாலி தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. காந்தியவாதி அன்னா ஹசாரே, கடும் எதிர்ப்பு தெரிவித்தார். டெல்லியில் போராட்டங்கள் நடந்தன.
வழக்கம்போல், பிரதமர் மோடி அந்த அவசர சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல என்று விளக்கம் அளித்தார். இருப்பினும் எதிர்ப்புகள் அடங்கவில்லை.
அதே சமயத்தில், இந்த அவசர சட்டத்துக்கு சட்ட வடிவம் அளிப்பதற்காக, 2015-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கிடையே மசோதா கொண்டுவரப்பட்டது. மக்களவையில் அம்மசோதா நிறைவேறி விட்டது. ஆனால், பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாததால், மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாதநிலை ஏற்பட்டது.
விவசாயிகளின் ஓராண்டு கால எதிர்ப்புக்கிடையே, வேளாண் சட்டங்களை ரத்துசெய்வதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது, பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், விவசாயிகள் எதிர்ப்பால் மோடி அரசு பின்வாங்குவது இது முதல்முறை அல்ல.
கடந்த 2014-ம் ஆண்டு, முதல்முறையாக மோடி ஆட்சிக்கு வந்தபோதே முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 9 முக்கிய திருத்தங்களை கொண்டு வந்து, அதை அவசர சட்டமாக பிறப்பித்தது.
வேளாண் சட்டங்களுக்கு எழுந்த எதிர்ப்பை போலவே, இந்த அவசர சட்டத்துக்கும் அப்போது எதிர்ப்பு எழுந்தது. ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பு உள்பட பெரும்பாலான விவசாய சங்கங்கள், இது விவசாயிகள் நலனுக்கு எதிரானது என்று கூறி, எதிர்ப்பு தெரிவித்தன.
அப்போதைய கூட்டணி கட்சிகளான சிவசேனா, அகாலி தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. காந்தியவாதி அன்னா ஹசாரே, கடும் எதிர்ப்பு தெரிவித்தார். டெல்லியில் போராட்டங்கள் நடந்தன.
வழக்கம்போல், பிரதமர் மோடி அந்த அவசர சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல என்று விளக்கம் அளித்தார். இருப்பினும் எதிர்ப்புகள் அடங்கவில்லை.
அதே சமயத்தில், இந்த அவசர சட்டத்துக்கு சட்ட வடிவம் அளிப்பதற்காக, 2015-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கிடையே மசோதா கொண்டுவரப்பட்டது. மக்களவையில் அம்மசோதா நிறைவேறி விட்டது. ஆனால், பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாததால், மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாதநிலை ஏற்பட்டது.
இதையடுத்து, பல மாத எதிர்ப்புக்கு பிறகு, பிரதமர் மோடி தனது ‘மனதின் குரல்’ வானொலி உரையில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கைவிடுவதாக அறிவித்தார். ஏற்கனவே அமலில் இருந்த அவசர சட்டம் காலாவதி ஆன பிறகு அதை மீண்டும் பிறப்பிக்க மாட்டோம் என்று அறிவித்து, எதிர்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X