search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.எல்.ஏ., டால் பகதூர் கோரி
    X
    எம்.எல்.ஏ., டால் பகதூர் கோரி

    உத்தரபிரதேசத்தில் கொரோனாவுக்கு 4-வது பாஜக எம்.எல்.ஏ. மரணம்

    உத்தரபிரதேசத்தில் கொரோனா 2-வது அலையில், ஆளும் பாஜக எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் ஒரு வார கால இடைவெளியில் கொரோனாவுக்கு பலியாகினர். தற்போது சலோன் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ., டால் பகதூர் கோரி கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
    லக்னோ :

    உத்தரபிரதேசத்தில் கொரோனா 2-வது அலையில், ஆளும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் ஒரு வார கால இடைவெளியில் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். தற்போது சலோன் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ., டால் பகதூர் கோரி நேற்று கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

    டால் பகதூர், கடந்த 15 நாட்களாக கொரோனா தொற்றுக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். டால்பகதுர், ராஜ்நாத் சிங் அமைச்சரவையில் 2 முறை எம்.எல்.ஏ. ஆகவும், ஒருமுறை மாநில மந்திரியாகவும் இருந்துள்ளார். கொரோனா 2-வது அலையில் மரணத்தை தழுவிய 4-வது பா.ஜனதா எம்.எல்.ஏ. இவர் ஆவார்.
    Next Story
    ×