search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
    X
    மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

    மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது- மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

    மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு செய்துஉள்ளார்.
    புதுடெல்லி:

    தேசம் வெல்ல தேசியக் கல்விக் கொள்கை... என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

    இதற்கு பதில் அளித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு செய்துஉள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-



    ''பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம்.

    மத்திய அரசு எந்தவொரு மாநிலத்தின் மீதும், எந்த மொழியையும் திணிக்காது என மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்”.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×