என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3 டாக்டர்கள், 26 செவிலியர்களுக்கு கொரோனா- மும்பை மருத்துவமனையை தனிமைப்படுத்திய அதிகாரிகள்
Byமாலை மலர்6 April 2020 12:05 PM GMT (Updated: 6 April 2020 12:05 PM GMT)
மும்பையில் உள்ள வாக்ஹார்ட் மருத்துவமனையில் நர்சுகள் மற்றும் டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை:
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இதுவரை 4067 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 109 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு வாரம் நிறைவடைந்துள்ளது. மருத்துவமனைகளுக்கு வரும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் படுக்கைகளுடன் தற்காலிக மருத்துவமனைகள் உருவாக்கப்படுகின்றன.
இந்நிலையில், மும்பை வாக்ஹார்ட் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 26 நர்சுகள் மற்றும் 3 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் தொடர்ச்சியாக இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, ‘நெகடிவ்’ என பரிசோதனை முடிவு வந்தால் மட்டுமே வெளியே செல்ல முடியும். இதேபோல் புதிய நோயாளிகளும் பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X