search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6ம் கட்ட தேர்தலிலேயே ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெற்றுவிட்டோம் - அமித்ஷா ஆரூடம்
    X

    6ம் கட்ட தேர்தலிலேயே ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெற்றுவிட்டோம் - அமித்ஷா ஆரூடம்

    பாராளுமன்ற தேர்தலில் 6ம் கட்டத்திலேயே ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுவிட்டோம் என பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. 7-வது கட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. மொத்தமுள்ள 543 இடங்களில் பெரும்பான்மை பெற 272 இடங்களில் வெற்றி பெறவேண்டும்.

    இந்நிலையில், 6ம் கட்ட தேர்தலிலேயே ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெற்றுவிட்டோம் என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் இதுவரை ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. 5 மற்றும் 6-வது கட்ட தேர்தலிலேயே பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை நாங்கள் பெற்றுவிட்டோம்.

    7வது கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகளால் 300க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
    Next Story
    ×