search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் வாக்களித்தார்
    X

    கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் வாக்களித்தார்

    கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். #LokSabhaElections2019 #PinarayiVijayan
    கண்ணூர்:

    பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

    பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம்  பினராயி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.



    கர்நாடக மாநிலம் ஷிமோகா தொகுதி பாஜக வேட்பாளர் ராகவேந்திரா ஷிகாரிபுரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, வாக்களிப்பதற்காக இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றார். காந்தி நகரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்ற அவர், தன் தாயாரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும் தன்னை பார்ப்பதற்காக வீட்டின் வெளியே திரண்டிருந்த மக்களையும் மோடி சந்தித்து பேசினார்.  #LokSabhaElections2019 #PinarayiVijayan
    Next Story
    ×