என் மலர்
செய்திகள்

இந்தியா முழுவதும் பிரியங்கா 100 கூட்டங்களில் பேசுகிறார்
இந்தியா முழுவதும் முக்கிய மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து குறைந்தபட்சம் 100 பொதுக்கூட்டங்களில் பிரியங்கா பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. #LoksabhaElections2019 #Priyankagandhi #Congress
புதுடெல்லி:
காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக கடந்த ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்ட பிரியங்கா உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளின் பொறுப்பாளராக உள்ளார்.
அந்த 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டிய பொறுப்பு பிரியங்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் கடந்த மாதம் முதல் அந்த 42 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் பிரியங்காவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கும் 42 தொகுதிகளிலும் காங்கிரசுக்கு ஆதரவு இல்லாத தொகுதிகளாகும். இதை கருத்தில் கொண்டு சமீபத்தில் அந்த தொகுதிகளின் வழியாக ஓடும் கங்கையில் பிரியங்கா படகு பயணம் செய்து பிரசாரம் செய்தார்.
அதன் பலனாக உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு முன்பு இருந்ததை விட 4 சதவீதம் ஆதரவு அதிகரித்து இருப்பதாக ஒரு சர்வே மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள பிரியங்கா தொடர்ந்து 42 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.
இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் மக்கள் மத்தியில் பிரியங்காவுக்கு அமோக ஆதரவு கிடைப்பதால் தங்கள் தொகுதிக்கும் பிரியங்கா வந்தால் எளிதான வெற்றியை பெற முடியும் என்று நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் கருதுகிறார்கள். இதையடுத்து தங்கள் மாநிலத்திற்கு வருமாறு காங்கிரஸ் தலைவர்கள் போட்டி போட்டு பிரியங்காவுக்கு அழைப்பு விடுத்தனர்.
பிரியங்கா முதலில் அந்த அழைப்புகளை ஏற்கவில்லை. உத்தரபிரதேசத்தில் மட்டுமே பிரசாரம் செய்யப்போவதாக அவர் கூறியிருந்தார். என்றாலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவரை விடவில்லை. சமரசம் செய்து மற்ற மாநிலங்களிலும் அவரை பிரசாரம் செய்ய சம்மதிக்க வைத்துள்ளனர்.
பிரியங்கா இதுவரை உத்தரபிரதேசம் தவிர வேறு மாநிலத்திற்கு சென்று பிரசாரம் செய்யவில்லை. கடந்த 4-ந்தேதி அவர் கேரளா மாநிலம் வயநாடு தொகுதிக்கு ராகுலுடன் சென்று இருந்தார். அப்போது தனக்கு கிடைத்த ஆரவாரமான வரவேற்பை கண்டு பிரியங்கா நெகிழ்ந்து போனார்.
இதையடுத்தே அவர் நாடு முழுவதும் பிரசாரத்திற்கு முழு மனதுடன் சம்மதித்துள்ளார். அவரது பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. மாநில காங்கிரஸ் தலைவர்கள் விடுத்துள்ள அழைப்பின் பேரில் எந்தெந்த மாநிலத்திற்கு செல்லலாம் என்ற பயண திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி பிரியங்கா இந்தியா முழுவதும் முக்கிய மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அதிரடி பிரசாரம் செய்வார் என்று தெரிய வந்துள்ளது. குறைந்தபட்சம் 100 பொதுக்கூட்டங்களில் அவர் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
உத்தரபிரதேசம் மாநிலம் தவிர கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய 5 மாநிலங்களிலும் அதிக கூட்டங்களில் பேச பிரியங்கா முடிவு செய்துள்ளார். இந்த 5 மாநிலங்களிலும் கணிசமான அளவுக்கு தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 5 மாநிலங்களில் அதிக இடங்களில் வெற்றி பெற்றாலே போதும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வந்து விட முடியும் என்று வியூகத்துடன் இந்த மாநிலங்களில் பிரியங்கா கவனம் செலுத்த உள்ளார். இந்த 5 மாநிலங்களில் சமீப காலமாக காங்கிரசுக்கு ஆதரவான நிலைபாடு உருவாகி இருக்கிறது.
இந்த நிலையை முழுமையாக காங்கிரசுக்கு ஆதரவாக மாற்றும் சக்தி ராகுலை விட பிரியங்காவுக்கே இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் கருதுகிறார்கள். எனவேதான் இந்த 5 மாநிலங்களில் ராகுலை விட அதிக கூட்டங்களில் பிரியங்காவை பேச வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #Priyankagandhi #Congress
காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக கடந்த ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்ட பிரியங்கா உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளின் பொறுப்பாளராக உள்ளார்.
அந்த 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டிய பொறுப்பு பிரியங்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் கடந்த மாதம் முதல் அந்த 42 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் பிரியங்காவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கும் 42 தொகுதிகளிலும் காங்கிரசுக்கு ஆதரவு இல்லாத தொகுதிகளாகும். இதை கருத்தில் கொண்டு சமீபத்தில் அந்த தொகுதிகளின் வழியாக ஓடும் கங்கையில் பிரியங்கா படகு பயணம் செய்து பிரசாரம் செய்தார்.
அதன் பலனாக உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு முன்பு இருந்ததை விட 4 சதவீதம் ஆதரவு அதிகரித்து இருப்பதாக ஒரு சர்வே மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள பிரியங்கா தொடர்ந்து 42 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.
இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் மக்கள் மத்தியில் பிரியங்காவுக்கு அமோக ஆதரவு கிடைப்பதால் தங்கள் தொகுதிக்கும் பிரியங்கா வந்தால் எளிதான வெற்றியை பெற முடியும் என்று நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் கருதுகிறார்கள். இதையடுத்து தங்கள் மாநிலத்திற்கு வருமாறு காங்கிரஸ் தலைவர்கள் போட்டி போட்டு பிரியங்காவுக்கு அழைப்பு விடுத்தனர்.
பிரியங்கா முதலில் அந்த அழைப்புகளை ஏற்கவில்லை. உத்தரபிரதேசத்தில் மட்டுமே பிரசாரம் செய்யப்போவதாக அவர் கூறியிருந்தார். என்றாலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவரை விடவில்லை. சமரசம் செய்து மற்ற மாநிலங்களிலும் அவரை பிரசாரம் செய்ய சம்மதிக்க வைத்துள்ளனர்.
பிரியங்கா இதுவரை உத்தரபிரதேசம் தவிர வேறு மாநிலத்திற்கு சென்று பிரசாரம் செய்யவில்லை. கடந்த 4-ந்தேதி அவர் கேரளா மாநிலம் வயநாடு தொகுதிக்கு ராகுலுடன் சென்று இருந்தார். அப்போது தனக்கு கிடைத்த ஆரவாரமான வரவேற்பை கண்டு பிரியங்கா நெகிழ்ந்து போனார்.
இதையடுத்தே அவர் நாடு முழுவதும் பிரசாரத்திற்கு முழு மனதுடன் சம்மதித்துள்ளார். அவரது பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. மாநில காங்கிரஸ் தலைவர்கள் விடுத்துள்ள அழைப்பின் பேரில் எந்தெந்த மாநிலத்திற்கு செல்லலாம் என்ற பயண திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி பிரியங்கா இந்தியா முழுவதும் முக்கிய மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அதிரடி பிரசாரம் செய்வார் என்று தெரிய வந்துள்ளது. குறைந்தபட்சம் 100 பொதுக்கூட்டங்களில் அவர் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
உத்தரபிரதேசம் மாநிலம் தவிர கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய 5 மாநிலங்களிலும் அதிக கூட்டங்களில் பேச பிரியங்கா முடிவு செய்துள்ளார். இந்த 5 மாநிலங்களிலும் கணிசமான அளவுக்கு தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 5 மாநிலங்களில் அதிக இடங்களில் வெற்றி பெற்றாலே போதும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வந்து விட முடியும் என்று வியூகத்துடன் இந்த மாநிலங்களில் பிரியங்கா கவனம் செலுத்த உள்ளார். இந்த 5 மாநிலங்களில் சமீப காலமாக காங்கிரசுக்கு ஆதரவான நிலைபாடு உருவாகி இருக்கிறது.
இந்த நிலையை முழுமையாக காங்கிரசுக்கு ஆதரவாக மாற்றும் சக்தி ராகுலை விட பிரியங்காவுக்கே இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் கருதுகிறார்கள். எனவேதான் இந்த 5 மாநிலங்களில் ராகுலை விட அதிக கூட்டங்களில் பிரியங்காவை பேச வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #Priyankagandhi #Congress
Next Story






