என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ஜெகன்மோகன் ரெட்டிக்கு 118 இடங்கள் கிடைக்கும்- கருத்து கணிப்பில் தகவல்
By
மாலை மலர்10 April 2019 9:42 AM GMT (Updated: 10 April 2019 9:42 AM GMT)

பாராளுமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.சி. கட்சிக்கு 106 முதல் 118 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #YSRC #JaganmohanReddy
விஜயவாடா:
ஆந்திர மாநிலத்திற்கு நாளை நடக்கும் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆந்திர சட்டசபை தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பற்றி பல்வேறு கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு 2 தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. டைம்ஸ் நவ் நடத் திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகன் ரெட்டி 43.7 சதவீத வாக்குகள் பெற்று ஆட்சி அமைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
அதுபோல சி.என்.என். நியூஸ் தொலைக்காட்சியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு அதிக வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளது. சந்திரபாபு நாயுடுவுக்கு குறைவான இடங்களே கிடைக்கும் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே டெல்லியைச் சேர்ந்த வி.டி.பி. அசோசியட்ஸ் என்ற நிறுவனமும் 2 தினங்களுக்கு முன்பு ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டது. அதில், “ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.சி. கட்சிக்கு 106 முதல் 118 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சிக்கு 54 முதல் 68 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளது. ஆனால் தெலுங்கு டி.வி. சானல் ஒன்று வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைப்பார் என்று கூறப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #YSRC #JaganmohanReddy
ஆந்திர மாநிலத்திற்கு நாளை நடக்கும் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆந்திர சட்டசபை தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பற்றி பல்வேறு கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு 2 தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. டைம்ஸ் நவ் நடத் திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகன் ரெட்டி 43.7 சதவீத வாக்குகள் பெற்று ஆட்சி அமைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
அதுபோல சி.என்.என். நியூஸ் தொலைக்காட்சியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு அதிக வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளது. சந்திரபாபு நாயுடுவுக்கு குறைவான இடங்களே கிடைக்கும் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே டெல்லியைச் சேர்ந்த வி.டி.பி. அசோசியட்ஸ் என்ற நிறுவனமும் 2 தினங்களுக்கு முன்பு ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டது. அதில், “ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.சி. கட்சிக்கு 106 முதல் 118 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சிக்கு 54 முதல் 68 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளது. ஆனால் தெலுங்கு டி.வி. சானல் ஒன்று வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைப்பார் என்று கூறப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #YSRC #JaganmohanReddy
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
