என் மலர்
செய்திகள்

மோடி காலாவதியான பிரதமர் - மம்தா பானர்ஜி தாக்கு
பாஜக தலைமையிலான ஆட்சியில் நாட்டில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டிய மம்தா பானர்ஜி இந்த நாட்டின் காலாவதியான பிரதமர் மோடி என்று குறிப்பிட்டார். #Modi #Mamata #expirybabu
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏப்ரல் 11, 18, 23,29 மற்றும் மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்து வருகிறார். சிலிகுரி மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்ற இரு பிரசார கூட்டங்களில் அவர் இன்று பேசினார்.
இதேபோல், கூச்பேஹார் மாவட்டத்தில் உள்ள டின்ஹட்டாவில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று உரையாற்றினார்.
தனது தலைமையிலான மேற்கு வங்காளம் மாநில அரசை தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்குள் கடன் தொல்லையால் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக மம்தா தெரிவித்தார்.

எனது தலைமையிலான அரசு இந்த மாநிலத்தில் விவசாயிகளின் வருமானத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது. ஆனால், இங்கு இன்று பிரசாரம் செய்த மோடி, இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு நான் தடைக்கல்லாக இருப்பதாக கூறுகிறார்.
நான் மோடியல்ல, எனக்கு பொய் சொல்ல தெரியாது. அவர் காலாவதியாகி விட்ட பிரதமர். தைரியம் இருந்தால் என்னுடன் அவர் ஒரே மேடையில் விவாதம் செய்யட்டும். அவரது கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கிறேன். அதேபோல் எனது கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும் என்றும் அவர் கூறினார். #Modi #Mamata #expirybabu
Next Story






