search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜகவுக்கு வாக்கு கேட்கும் ராஜஸ்தான் கவர்னரை நீக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
    X

    பாஜகவுக்கு வாக்கு கேட்கும் ராஜஸ்தான் கவர்னரை நீக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

    ஒரு மாநிலத்தின் கவர்னராக இருந்துகொண்டு பாஜகவுக்கு வாக்களித்து மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என பிரசாரம் செய்த கல்யான் சிங்கை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. #Congressdemands #KalyanSingh #Governorpost
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம் மாநில முதல் மந்திரியாக 1991-92 காலகட்டத்தில் பதவி வகித்தவர் கல்யாண் சிங். பாஜகவை சேர்ந்த இவர், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் ராஜஸ்தான் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.

    கடந்த 23-ம் தேதி அலிகர் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் கல்யாண் சிங், ‘நாம் அனைவருமே பாஜக தொண்டர்கள்தான். இந்த தேர்தலில் பாஜக மகத்தான வெற்றிபெற வேண்டும் என்பது நமது நோக்கமாக இருக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை மோடி பிரதமராக வர வேண்டும். இது நாட்டுக்கு மிகவும் முக்கியம்’ என்று பேசியதாக செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், அவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி இன்று கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. 

    டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ‘மதிப்புக்குரிய ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங் ஒரு அரசியல்வாதியைப்போல் பாஜகவுக்கு வாக்கு கேட்பது அரசியலமைப்பு சட்டத்தின் அனைத்து மரபுகளையும் அர்த்தமற்றதாக்கி விடும் வகையில் அமைந்துள்ளது. இதன்மூலம் கவர்னர் அலுவலகத்தின் தரத்தையே அவர் குறைத்து விட்டார்.

    நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்மீது சிறிதளவிலாவது மரியாதை இருந்தால் ஒருகனம் கூட தாமதிக்காமல் கவர்னர் பதவியில் இருந்து கல்யாண் சிங் விலக வேண்டும். இல்லாவிட்டால் அவரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். #Congressdemands #KalyanSingh #Governorpost
    Next Story
    ×