என் மலர்
செய்திகள்

3 தொகுதி இடைத்தேர்தலை பிறகு நடத்துவதில் என்ன பிரச்சனை?- சுப்ரீம் கோர்ட்
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலை பிறகு நடத்துவதில் என்ன பிரச்சனை? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். #DMK #SC #TNBypoll
புதுடெல்லி:
பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பின்னர் அறிவித்தார்.

அதன்படி இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்லை பிறகு நடத்துவதில் என்ன பிரச்சனை? என்றும் இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடும் படி எங்களை நிர்பந்திக்காதீர்கள் என்றும் தெரிவித்தனர்.
மேலும் இவ்வழக்கில் மார்ச் 25-க்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #DMK #TNBypoll
பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பின்னர் அறிவித்தார்.
இந்த உத்தரவால் கடும் அதிருப்தி அடைந்த திமுக, செவ்வாய்கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது. அதில், தமிழகத்தில் விடுபட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடும்படி கூறப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், வெள்ளிக்கிழமை அவசர வழக்காக விசாரிப்பதாக கூறியது.

மேலும் இவ்வழக்கில் மார்ச் 25-க்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #DMK #TNBypoll
Next Story






