என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்
Byமாலை மலர்18 Dec 2018 4:15 AM GMT (Updated: 18 Dec 2018 4:15 AM GMT)
கேரளாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொடூரமாக அடித்து கொன்ற தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள வர்க்கலை பகுதியைச் சேர்ந்தவர் உத்ரா, (வயது 21). இவரது கணவர் மனு, (26).
இவர்கள் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2½ வயதில் ஏகலைவன் என்ற ஆண் குழந்தை இருந்தது. சமீப காலமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் உத்ரா, கணவரை பிரிந்து அந்த பகுதியில் தனியாக வீடு எடுத்து தனது குழந்தையுடன் வசித்து வந்தார்.
அப்போது அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரெஜிஸ் (26) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியதால் அவர்கள் இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் குழந்தை ஏகலைவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு குழந்தையின் நிலை கவலைக்கிடமானதால் வேறு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டது.
இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் குழந்தை கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதனால் உத்ராவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை அவரும், கள்ளக்காதலனும் சேர்ந்து தரையில் வீசியும், சுவற்றில் அடித்தும் சித்ரவதை செய்தது தெரிய வந்தது. இதனால் ஏற்பட்ட காயத்தால் குழந்தை இறந்து உள்ளது.
இதை தொடர்ந்து உத்ராவும், அவரது கள்ளக்காதலன் ரெஜிசும் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள வர்க்கலை பகுதியைச் சேர்ந்தவர் உத்ரா, (வயது 21). இவரது கணவர் மனு, (26).
இவர்கள் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2½ வயதில் ஏகலைவன் என்ற ஆண் குழந்தை இருந்தது. சமீப காலமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் உத்ரா, கணவரை பிரிந்து அந்த பகுதியில் தனியாக வீடு எடுத்து தனது குழந்தையுடன் வசித்து வந்தார்.
அப்போது அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரெஜிஸ் (26) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியதால் அவர்கள் இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் குழந்தை ஏகலைவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு குழந்தையின் நிலை கவலைக்கிடமானதால் வேறு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கணவர் மனு, அதிர்ச்சி அடைந்தார். அவர் போலீசில் புகாரும் செய்தார். தனது குழந்தை உடல்நலக்குறைவால் சாகவில்லை என்றும் அதில் மர்மம் உள்ளது என்றும் கூறி இருந்தார்.
கொல்லப்பட்ட ஏகலைவன்
இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் குழந்தை கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதனால் உத்ராவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை அவரும், கள்ளக்காதலனும் சேர்ந்து தரையில் வீசியும், சுவற்றில் அடித்தும் சித்ரவதை செய்தது தெரிய வந்தது. இதனால் ஏற்பட்ட காயத்தால் குழந்தை இறந்து உள்ளது.
இதை தொடர்ந்து உத்ராவும், அவரது கள்ளக்காதலன் ரெஜிசும் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X