என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொச்சியை நோக்கி கஜா புயல்- கேரளாவில் இன்று கனமழை பெய்யும்
Byமாலை மலர்16 Nov 2018 4:34 AM GMT (Updated: 16 Nov 2018 4:34 AM GMT)
கஜா புயல் திருச்சி, மதுரை, தேனி மாவட்டம் வழியாக மூணாறை கடந்து கொச்சி அரபி கடலில் இன்று மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கும் என்பதால் கேரளாவில் இன்று பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Gaja #KeralaRain
திருவனந்தபுரம்:
வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை- வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து பலத்த சேதமும் ஏற்பட்டது.
கஜா புயல் எதிரொலியாக கேரள மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை 8 மணி அளவில் அடைமழையாக மாறி கொட்டித்தீர்த்து வருகிறது. மழையின் போது பலத்த காற்றும் வீசுகிறது. கடலில் ராட்சத அலைகளும் எழுந்து கரையை நோக்கி சீறிப்பாய்கிறது.
கேரள மாநிலம் கோட்டயம், எர்ணாகுளம், திருவல்லா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கேரளாவில் கனமழை பெய்ததால் அந்த மாநிலம் முழுவதும் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டது. மழை காரணமாக கேரளாவே வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளித்தது. அந்த மழை பாதிப்பில் இருந்து கேரள மாநிலம் இன்னும் முழுமையாக மீள முடியவில்லை. இந்த நிலையில் கஜா புயல் கேரளாவை மிரட்ட தொடங்கி உள்ளது. #GajaCyclone #Gaja #KeralaRain
வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை- வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து பலத்த சேதமும் ஏற்பட்டது.
கஜா புயல் திருச்சி, மதுரை, தேனி மாவட்டம் வழியாக மூணாறை கடந்து கேரள மாநிலம் கொச்சி அரபி கடலில் இன்று மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவில் இன்று பலத்த மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது.
கேரள மாநிலம் கோட்டயம், எர்ணாகுளம், திருவல்லா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கேரளாவில் கனமழை பெய்ததால் அந்த மாநிலம் முழுவதும் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டது. மழை காரணமாக கேரளாவே வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளித்தது. அந்த மழை பாதிப்பில் இருந்து கேரள மாநிலம் இன்னும் முழுமையாக மீள முடியவில்லை. இந்த நிலையில் கஜா புயல் கேரளாவை மிரட்ட தொடங்கி உள்ளது. #GajaCyclone #Gaja #KeralaRain
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X