என் மலர்

    செய்திகள்

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலாவுடன் நாளை சந்திப்பு
    X

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலாவுடன் நாளை சந்திப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் உள்ள சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நாளை சந்தித்து பேசுகின்றனர். #Sasikala #TTVDhinakaran #18MLAs
    பெங்களூரு:

    சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    அவரை நாளை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்திக்க உள்ளனர்.

    இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:-

    பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நாளை கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் சந்திக்க இருக்கிறோம். அவரை சந்திக்க 6 பேர் மட்டுமே அனுமதிக்க சிறை விதி உள்ளதால் 4 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் அவரை சந்திக்க முடியும்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நாளை பெங்களூரு செல்கிறோம். நானும் அங்கு செல்கிறேன். அவரை சந்தித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எங்கள் துணை பொதுச்செயலாளர் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sasikala #TTVDhinakaran #18MLAs
    Next Story
    ×