என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரபல மலையாள நடிகருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
Byமாலை மலர்8 Oct 2018 11:59 AM GMT (Updated: 8 Oct 2018 11:59 AM GMT)
மலையாள நடிகரான குஞ்சாக்கோ பாவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை:
காதலுக்கு மரியாதை என்ற தமிழ் சினிமாவில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த சினிமா முதலில் மலையாளத்தில் எடுக்கப்பட்டது. அதில் விஜய் கதாபாத்திரத்தில் பிரபல கேரள சினிமா நடிகர் குஞ்சாக்கோ பாவன் நடித்திருந்தார். அதன்பின்னர் 50-க்கும் மேற்பட்ட சினிமாவில் நடித்து புகழ்பெற்றவர்.
சம்பவத்தன்று கண்ணூரில் நடந்த சினிமா படப்பிடிப்புகாக எர்ணாகுளம் தெற்கு ரெயில் நிலையத்தில் அமர்ந்திருந்தார். அப்போது நடிகர் குஞ்சாக்கோ பாவன் அருகே வந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று மிரட்டினார். வாலிபரின் செயலை பார்த்த குஞ்சாக்கோ பாவன் அதிர்ச்சியடைந்தார். அந்த வழியே வந்த பொதுமக்கள் வாலிபரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
பின்னர் கண்ணூர் ரெயில் வந்ததும் குஞ்சாக்கோ பாவன் ரெயில் ஏறி படப்பிடிப்புக்கு புறப்பட்டார். கண்ணூர் ரெயில் நிலையம் வந்ததும் அங்குள்ள ரெயில்வே போலீசில் தன்னை எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் கொலை செய்ய முயன்றார் என்று புகார் அளித்தார்.
புகாரின் பேரில் கண்ணூர் போலீசார் எர்ணாகுளம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எர்ணாகுளம் ரெயில்வே போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமிரா கட்சி பதிவுகளை வைத்து வாலிபரை தேடினர்.
இந்நிலையில் நேற்று அந்த வாலிபரை ரெயிவே போலீசார் கைது செய்தனர். நடிகர் குஞ்சாக்கோ பாவனை கொலை செய்ய முயன்றது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
காதலுக்கு மரியாதை என்ற தமிழ் சினிமாவில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த சினிமா முதலில் மலையாளத்தில் எடுக்கப்பட்டது. அதில் விஜய் கதாபாத்திரத்தில் பிரபல கேரள சினிமா நடிகர் குஞ்சாக்கோ பாவன் நடித்திருந்தார். அதன்பின்னர் 50-க்கும் மேற்பட்ட சினிமாவில் நடித்து புகழ்பெற்றவர்.
சம்பவத்தன்று கண்ணூரில் நடந்த சினிமா படப்பிடிப்புகாக எர்ணாகுளம் தெற்கு ரெயில் நிலையத்தில் அமர்ந்திருந்தார். அப்போது நடிகர் குஞ்சாக்கோ பாவன் அருகே வந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று மிரட்டினார். வாலிபரின் செயலை பார்த்த குஞ்சாக்கோ பாவன் அதிர்ச்சியடைந்தார். அந்த வழியே வந்த பொதுமக்கள் வாலிபரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
பின்னர் கண்ணூர் ரெயில் வந்ததும் குஞ்சாக்கோ பாவன் ரெயில் ஏறி படப்பிடிப்புக்கு புறப்பட்டார். கண்ணூர் ரெயில் நிலையம் வந்ததும் அங்குள்ள ரெயில்வே போலீசில் தன்னை எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் கொலை செய்ய முயன்றார் என்று புகார் அளித்தார்.
புகாரின் பேரில் கண்ணூர் போலீசார் எர்ணாகுளம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எர்ணாகுளம் ரெயில்வே போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமிரா கட்சி பதிவுகளை வைத்து வாலிபரை தேடினர்.
இந்நிலையில் நேற்று அந்த வாலிபரை ரெயிவே போலீசார் கைது செய்தனர். நடிகர் குஞ்சாக்கோ பாவனை கொலை செய்ய முயன்றது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X