search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேறு சாதி வாலிபருடன் ஓடிய சிறுமியை மரத்தில் கட்டிவைத்து அடி, உதை- கட்ட பஞ்சாயத்தில் தண்டனை
    X

    வேறு சாதி வாலிபருடன் ஓடிய சிறுமியை மரத்தில் கட்டிவைத்து அடி, உதை- கட்ட பஞ்சாயத்தில் தண்டனை

    பீகார் மாநிலத்தில் வேறு சாதி வாலிபருடன் ஓடிப்போனதற்கு தண்டனையாக சிறுமியை சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #HinduBiy #MuslimGirl #Nawada
    பாட்னா:

    பீகார் மாநிலம் நவாடா பகுதியில் உள்ள ஜோகியா மாரன் கிராமத்தை சேர்ந்த சிறுமி வேறு சாதி வாலிபரை காதலித்தாள். அதை அறிந்த பெற்றோர் அவளை கண்டித்தனர்.

    இந்த நிலையில் அவள் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த அவளது தந்தையும் ஜோகியா மாரன் கிராம மக்களும் சேர்ந்து அந்த சிறுமியை தேடிப்பிடித்து இழுத்து வந்தனர்.



    பின்னர் கிராமத்தினர் கூடி கட்ட பஞ்சாயத்து பேசினர். முடிவில் அந்த சிறுமியை ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். வேறு சாதி வாலிபருடன் ஓடிப்போனதற்கு தண்டனையாக சிறுமியை சரமாரியாக அடித்து உதைத்தனர். கிராம மக்களுடன் சிறுமியின் தந்தையும் அவளை தாக்கினார்.



    இது பற்றிய தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கிராமத்தினரின் பிடியில் இருந்து 5 மணி நேரத்துக்கு பிறகு சிறுமியை மீட்டனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #HinduBiy #MuslimGirl #Nawada
    Next Story
    ×