என் மலர்
செய்திகள்

கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை
காட்டுப்பன்றிக்கு வைத்த கம்பி வேலியில் சிறுத்தை சிக்கியது
தோட்டத்தில் காட்டுப்பன்றிகளுக்கு வைத்த கம்பி வேலியில் சிறுத்தை சிக்கியதை அடுத்து அதை பாதுகாப்பாக வனத்துக்குள் விட அதிகாரிகள் முடிவு செய்தனர்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது மங்கலம்டேம். அணையை ஒட்டியுள்ள இந்த பகுதியில் ரப்பர் தோட்டம், வாழை மற்றும் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளது.
தோட்டங்களுக்குள் காட்டுப்பன்றிகள் நுழைந்து விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தி வருகிறது. இதனால் தங்களுக்கு பெரிய இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வனத்துறையிடம் புகார் தெரிவித்தனர். சில விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற கம்பிவேலி அமைத்தனர்.
இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் அங்குள்ள ரப்பர் தோட்டத்திற்கு தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். கம்பி வேலிக்கு இடையே உள்ள ஒரு மதில் சுவர் அருகே இருந்து சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்த கரியங்கயம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் கால்நடை டாக்டர் மற்றும் மயக்க மருந்து செலுத்தும் உதவியாளருடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். கம்பிவேலியில் சிக்கிய சிறுத்தையால் ஓட முடியவில்லை. இதனால் மிக ஆக்ரோஷமாக இருந்தது.
இதனையடுத்து கால்நடை டாக்டர் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே சிறுத்தை மயங்கியது. பின்னர் அதனை கூண்டுக்குள் மீட்டனர். மயங்கிய நிலையில் உள்ள சிறுத்தையை பாதுகாப்பாக வனத்துக்குள் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #tamilnews
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது மங்கலம்டேம். அணையை ஒட்டியுள்ள இந்த பகுதியில் ரப்பர் தோட்டம், வாழை மற்றும் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளது.
தோட்டங்களுக்குள் காட்டுப்பன்றிகள் நுழைந்து விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தி வருகிறது. இதனால் தங்களுக்கு பெரிய இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வனத்துறையிடம் புகார் தெரிவித்தனர். சில விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற கம்பிவேலி அமைத்தனர்.
இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் அங்குள்ள ரப்பர் தோட்டத்திற்கு தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். கம்பி வேலிக்கு இடையே உள்ள ஒரு மதில் சுவர் அருகே இருந்து சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்த கரியங்கயம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் கால்நடை டாக்டர் மற்றும் மயக்க மருந்து செலுத்தும் உதவியாளருடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். கம்பிவேலியில் சிக்கிய சிறுத்தையால் ஓட முடியவில்லை. இதனால் மிக ஆக்ரோஷமாக இருந்தது.
இதனையடுத்து கால்நடை டாக்டர் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே சிறுத்தை மயங்கியது. பின்னர் அதனை கூண்டுக்குள் மீட்டனர். மயங்கிய நிலையில் உள்ள சிறுத்தையை பாதுகாப்பாக வனத்துக்குள் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #tamilnews
Next Story