search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாட்டோம், ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடையும் - அருண் ஜெட்லி
    X

    ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாட்டோம், ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடையும் - அருண் ஜெட்லி

    ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், “ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாட்டோம்” என நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #Rafale #RahulGandhi #ArunJaitley
    புதுடெல்லி:-

    ரபேல் விமான பேரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைக்க மத்திய அரசு வற்புறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். இந்த பேட்டி இந்திய அரசியலில் புயலை கிளப்பியது. விமானத்தை தயாரிக்கும் டசால்ட் நிறுவனம், “எங்களுக்கு தேவையான நிறுவனத்தை நாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்” என விளக்கம் அளித்திருந்தது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், நிதி மந்திரி அருண் ஜெட்லி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில் கூறியதாவது:-

    ராகுல் காந்தி மத்திய அரசு மீது கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கும், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே, ரபேல் விமானம் குறித்து அளித்த பேட்டிக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. 30-ம் தேதி ராகுல் ட்விட்டரில் ஒரு கருத்து தெரிவிக்கிறார். அடுத்த சில வாரங்களில் ஹாலண்டே சர்ச்சை கருத்தை வெளியிடுகிறார். இந்த இரண்டு கருத்துக்களும் நன்கு திட்டமிட்டு வெளியிடப்பட்டவை போல தோன்றுகிறது. இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது. இரண்டும் ஒரே அலைவரிசையில் காணப்படுகின்றன. 



    ஏதோ ஒரு விதமான பழிவாங்கும் எண்ணத்தில் ராகுல் இருக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது. இந்த மொத்த குற்றச்சாட்டுகளுமே திட்டமிட்ட ஒன்றாக இருந்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இரு நாடுகளின் எதிர்க்கட்சி தலைவர்களும் ஒரே அலைவரிசையில் பேசுகின்றனர். 

    பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே, தான் முன்பு கூறியதை உடனே மறுக்கிறார். அவர் இரண்டாவதாக அளித்த பேட்டியில், “ ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என பிரான்சின் டசால்ட் நிறுவனத்துக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததா என்பது எனக்கு தெரியாது. இது குறித்து டசால்ட் நிறுவனம் தான் பதில் கூற வேண்டும்” என, குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த இரண்டு பேட்டிகளும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக உள்ளன.

    ராகுல் காந்தி மற்றும் சில கட்சிகள் குற்றம் சாட்டுவதால் ஒப்பந்தத்ததை ரத்து செய்ய முடியாது. ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடையும்

    என அருண் ஜெட்லி பேசினார்.
    Next Story
    ×