search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி - மம்தா பானர்ஜி அறிவிப்பு
    X

    கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி - மம்தா பானர்ஜி அறிவிப்பு

    கேரள மாநிலத்தை சின்னாபின்னப்படுத்தியுள்ள வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு மேற்கு வங்காளம் மாநிலம் சார்பில் 10 கோடி ரூபாய் வழங்குவதாக முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். #KeralaFloods
    கொல்கத்தா:

    கடந்த நூறாண்டில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பால் இதுவரை சுமார் 350 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    தமிழக அரசின் சார்பில் ரூ.10 கோடி, டெல்லி அரசின் சார்பில் ரூ.10 கோடி, தெலுங்கானா அரசின் சார்பில் ரூ.25 கோடி, பீகார் அரசின் சார்பில் ரூ.10 கோடி, அரியானா அரசின் சார்பாக ரூ.10 கோடி, மகாராஷ்டிரா அரசின் சார்பாக சார்பில் ரூ.20 கோடி, குஜராத் அரசின் சார்பாக ரூ.10 கோடி, உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பாக ரூ.15 கோடி, பஞ்சாப் அரசின் சார்பில் ரூ.10 கோடி, ஜார்க்கண்ட் அரசு சார்பில் ரூ.5 கோடி, மத்தியப்பிரதேசம் அரசின் சார்பில் ரூ.10 கோடி, மகாராஷ்டிரா அரசு சார்பில் 20 கோடி ரூபாய் என நிதியுதவிகள் குவிந்து வருகின்றன.

    மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் தனிப்பட்ட முறையில் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.  காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.


    இந்நிலையில், கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு மேற்கு வங்காளம் மாநிலம் சார்பில் 10 கோடி ரூபாய் வழங்குவதாக முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று அறிவித்துள்ளார்.

    மேலும், இந்த பேரிடரால் பாதிப்படைந்துள்ள கேரளாவுக்கு தேவைப்படும் இதர உதவிகள் அனைத்தையும் செய்ய மேற்கு வங்காளம் மாநில அரசு தயாராக இருப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மம்தா, கேரளாவில் வாழும் சகோதர, சகோதரிகளில் வாழ்க்கை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்தித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். #Mamataannounces #KeralaFloods
    Next Story
    ×