என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெருகிவரும் பாலியல் பலாத்காரங்கள் - ராகுல் குற்றச்சாட்டு
Byமாலை மலர்10 Aug 2018 2:01 PM GMT (Updated: 10 Aug 2018 2:01 PM GMT)
பா.ஜ.க ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் மட்டும் ஏன் பெண்கள் அதிகம் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். #RahulGandhi #BJP #Chhattisgarh
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் ராஜீவ் பவன் திறப்பு விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அங்கே கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடையே உரையாற்றினார்.
அப்போது, கடந்த 4 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட நடந்தது இல்லை என குறிபிட்டுள்ளார். மேலும், உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பாக பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என குற்றம்சாட்டிய அவர், பா.ஜ.க ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் மட்டும் ஏன் பெண்கள் அதிக அளவில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பெயர் பனாமா ஆவணங்களில் வந்தபோது அதில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். ஆனால் சத்தீஸ்கரில் பா.ஜ.க முதல்மந்திரியின் மகனின் பெயர் பனாமா ஆவணங்களில் வரும் போது, அதுதொடர்பாக இன்னும் விசாரணை கூட ஆரம்பிக்கவில்லை இதுதான் பாஜக நாட்டை பாதுகாப்பதா? என விமர்சித்துள்ளார். #RahulGandhi #BJP #Chhattisgarh
சத்தீஸ்கர் மாநிலத்தில் ராஜீவ் பவன் திறப்பு விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அங்கே கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடையே உரையாற்றினார்.
அப்போது, கடந்த 4 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட நடந்தது இல்லை என குறிபிட்டுள்ளார். மேலும், உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பாக பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என குற்றம்சாட்டிய அவர், பா.ஜ.க ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் மட்டும் ஏன் பெண்கள் அதிக அளவில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பெயர் பனாமா ஆவணங்களில் வந்தபோது அதில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். ஆனால் சத்தீஸ்கரில் பா.ஜ.க முதல்மந்திரியின் மகனின் பெயர் பனாமா ஆவணங்களில் வரும் போது, அதுதொடர்பாக இன்னும் விசாரணை கூட ஆரம்பிக்கவில்லை இதுதான் பாஜக நாட்டை பாதுகாப்பதா? என விமர்சித்துள்ளார். #RahulGandhi #BJP #Chhattisgarh
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X