search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது- மத்திய அரசு ஆய்வில் தகவல்
    X

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது- மத்திய அரசு ஆய்வில் தகவல்

    மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்திய ஆய்வில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசு பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. #ThoothukudiProtest #Sterlite
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக கூறி பொதுமக்கள் 100 நாட்களாக போராட்டம் நடத்தினார்கள்.

    போராட்டத்தின் முடிவில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

    இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள மாசு பாதிப்புகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், நிலத்தடி நீர் ஆய்வு வாரியம் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆய்வு நடத்தி வருகின்றன.

    இதில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்திய ஆய்வில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசு பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    டெல்லி மேல்-சபையில் எம்.பி.க்கள் கேட்ட கேள்விகளுக்கு மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி அர்ஜூன் ராம் மேஹ்வால் பதில் அளிக்கையில் கூறியதாவது:-



    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய நிலத்தடி நீர் வாரிய அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அங்குள்ள நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவில் காட்மியம், குரோமியம், மெக்னீசியம், இரும்பு, ஆர்சேனிக் ஆகிய உலோக மாசுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

    அதே போல் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள ஆய்வறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரில் இரும்பு, நிக்கல், காட்மியம், புளோரைடு ஆகிய உலோக மாசுக்கள் கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அர்ஜுன் ராம் மேஹ்வால் தெரிவித்தார். #ThoothukudiProtest #Sterlite
    Next Story
    ×