search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமராகும் பகல்கனவை மம்தா நிறுத்திக்கொள்ள வேண்டும் - பாஜக அட்வைஸ்
    X

    பிரதமராகும் பகல்கனவை மம்தா நிறுத்திக்கொள்ள வேண்டும் - பாஜக அட்வைஸ்

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகி விடுவோம் எனும் பகல் கனவை மம்தா பானர்ஜி நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ராகுல் சின்ஹா குறிப்பிட்டுள்ளார். #BJP #RahulSinha
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று நடைபெற்ற பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, 2019 பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தின் 42 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் பா.ஜ.க தேசிய செயலாளர் ராகுல் சின்ஹா, ‘மம்தா பானர்ஜி மீண்டும் மாநில அரசை கைப்பற்றுவதே சந்தேகத்தில் இருக்கும் நிலையில், அவர் டெல்லிக்கு கனவு காண்கிறார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகி விடுவோம் எனும் பகல் கனவை மம்தா பானர்ஜி நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். #BJP #RahulSinha
    Next Story
    ×