search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்தது
    X

    கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்தது

    கர்நாடக சட்டசபையில் 11 நாட்கள் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது. #KarnatakaAssembly
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில், முதல்மந்திரியாக குமாரசாமி பதவியேற்று நடைபெறும் முதல் பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் இந்த மாதம் துவங்கியது. இந்த கூட்டத்தில் முதல் மந்திரி குமாரசாமி, 2018-19-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டாக சுமார் 2.18 கோடி ரூபாயை அறிவித்திருந்தார்.

    மேலும், விவசாயிகளின் சுமார் 40 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். இதையடுத்து, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், சுமார் 11 நாட்கள் நடைபெற்ற கர்நாடக மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது. மேலும், வரும் நவம்பர் மாதத்தில் அடுத்தகட்ட கூட்டத்தொடர் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #KarnatakaAssembly
    Next Story
    ×