search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் சிறுவன் பலி
    X

    மும்பையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் சிறுவன் பலி

    மும்பையில் கலம்பொலி பகுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் சோஹன் பாபன் கட்கே என்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். #cylinderblast
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் கலம்பொலி பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் இன்று காலை சமைப்பதற்காக ஒரு பெண் எரிவாயு சிலிண்டரை பற்றவைத்த போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீட்டின் சுவர் இடிந்து அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சரிந்தது.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் மற்றும் அவரது மகன் சோஹன் பாபன் கட்கே (வயது 5) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பாகவே சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #cylinderblast
    Next Story
    ×