என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஜி.எஸ்.டி.யில் கொண்டு வந்தாலும் பெட்ரோல் விலையில் பெரிய மாற்றம் இருக்காது - சுஷில்குமார் மோடி
பாட்னா:
பீகார் பா.ஜனதா துணை முதல்-மந்திரியும், ஜி.எஸ்.டி. குழுவின் தலைவரான சுஷில் குமார் மோடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தாலும் விலையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இருக்காது.
ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வந்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என்று கருதுவது தவறானது. சிறிய அளவில் மட்டுமே மாற்றம் இருக்கும்.
ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் உள்ள மாநிலங்களில் ஜி.எஸ்.டி. வரையறுக்கப்பட்ட அதிக பட்ச வரியைவிட கூடுதல் வரி வசூலிப்பது இயல்பான ஒன்றுதான். இது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் நடைமுறைதான்.
பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.யில் கொண்டு வருவதற்கான இறுதி முடிவு ஜி.எஸ்.டி. கவுன்சிலால் எடுக்கப்படும்.
ஜி.எஸ்.டி. அமைப்பு உறுதிபடும் வரை பெட்ரோலிய பொருட்களை வரம்புக்குள் கொண்டு வருவதில்லை என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒருமனதாக முடிவு எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சுஷில் குமார் மோடி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். #Petrol #Diesel #SushilModi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்