search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லைப்பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை
    X

    எல்லைப்பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் தாங்தார் எல்லைப்பகுதி வழியாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 5 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். #securityforce #militantskilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவத்தினரும், பயங்கரவாத அமைப்பினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், அதற்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் எல்லையில் தாக்குதலை நிறுத்திக் கொள்ளலாம் என கோரிக்கை விடுத்த பாகிஸ்தான் அதனை மீறி மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் தாங்தார் எல்லைப்பகுதி வழியாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர். ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    மேலும், பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #securityforce #militantskilled 
    Next Story
    ×