என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவசேனா முதுகில் குத்திவிட்டது - தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் ஆவேசம்
Byமாலை மலர்24 May 2018 12:40 AM GMT (Updated: 24 May 2018 12:40 AM GMT)
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியினர் பாஜக முதுகில் குத்திவிட்டது என உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். #PalgharBypoll #PMModi #YogiAdityanath #Sivasena
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மக்களவை தொகுதிக்கு மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சிவசேனா, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், விரார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பாஜகவை சேர்ந்த உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் நேற்று பேசியதாவது:
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியினர் இந்துத்துவா பாதையில் இருந்து திசைமாறி உள்ளனர். எனவே, பிரதமர் மோடியால் தான் வளர்ச்சி சாத்தியமாகும்.
எங்கள் கட்சி விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிட்டு வருகிறது. பாஜக அதன் கூட்டணி கட்சியால் முதுகில் குத்தப்பட்டு வருகிறது. இதை காணும் ண்டால் பால் தாக்கரே ஆன்மா மிகவும் வருந்தும், துக்கப்படும்,
பால்கர் தொகுதியில் பாஜகவினர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
மகாராஷ்டிரா மாநில மக்கள் அவர்களுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். இந்த தேர்தலில் பெறும் வெற்றி மூலம் நிலையான ஆட்சி கிடைக்கும். பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சி அடைவது உறுதி என தெரிவித்தார். #PalgharBypoll #PMModi #YogiAdityanath #Sivasena
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X