என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலித் வீடுகளில் தலைவர்கள் சாப்பிடுவதால் மட்டுமே தீண்டாமை ஒழிந்து விடாது - மத்திய மந்திரி
Byமாலை மலர்5 May 2018 3:43 PM GMT (Updated: 5 May 2018 3:43 PM GMT)
தலித் வீடுகளுக்குள் நுழைந்து அரசியல் தலைவர்கள் அவர்களுடன் உணவு சாப்பிடுவதால் மட்டுமே தீண்டாமையை ஒழித்து விட முடியாது என மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் குறிப்பிட்டுள்ளார். #Untouchability #RamVilasPaswan
மும்பை:
மும்பையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராம்விலாஸ் பஸ்வானிடம், தலித் வீடுகளில் பா.ஜ.க தலைவர்கள் சாப்பிடுவது தொடர்பாக ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராம் விலாஸ் பஸ்வான், தலித் வீடுகளுக்குள் நுழைந்து அரசியல் தலைவர்கள் அவர்களுடன் உணவு சாப்பிடுவதால் மட்டுமே தீண்டாமையை ஒழித்து விட முடியாது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘நீங்கள் யார் வீட்டில் வேண்டுமானாலும் உணவருந்தலாம் ஆனால் சபரி வீட்டில் ராமர் சாப்பிட்டது போல் நாம் அவர்களுடன் ஒன்றிணைந்து விட முடியாது. பல ஆண்டுகளான எங்கள் அரசியல் வாழ்வில், நாங்கள் பலரது வீடுகளில் உணவு அருந்தியுள்ளோம் எனினும் அவர்களது சாதி என்ன என்பது பற்றி கேட்டது இல்லை.
தலித் வீடுகளில் அரசியல் தலைவர்கள் உணவு அருந்துவதால் மட்டுமே தீண்டாமை ஒழிந்துவிடும் என்பதும் சரியல்ல.
பெயரளவிற்கு அவர்களது வீடுகளுக்குச் சென்று உணவு உண்பதை விடுத்து, அவர்களின் அத்தியாவசிய தேவைகளான கல்வி போன்றவற்றை மேம்படுத்தவும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் முயற்சிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். #Untouchability #RamVilasPaswan
மும்பையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராம்விலாஸ் பஸ்வானிடம், தலித் வீடுகளில் பா.ஜ.க தலைவர்கள் சாப்பிடுவது தொடர்பாக ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராம் விலாஸ் பஸ்வான், தலித் வீடுகளுக்குள் நுழைந்து அரசியல் தலைவர்கள் அவர்களுடன் உணவு சாப்பிடுவதால் மட்டுமே தீண்டாமையை ஒழித்து விட முடியாது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘நீங்கள் யார் வீட்டில் வேண்டுமானாலும் உணவருந்தலாம் ஆனால் சபரி வீட்டில் ராமர் சாப்பிட்டது போல் நாம் அவர்களுடன் ஒன்றிணைந்து விட முடியாது. பல ஆண்டுகளான எங்கள் அரசியல் வாழ்வில், நாங்கள் பலரது வீடுகளில் உணவு அருந்தியுள்ளோம் எனினும் அவர்களது சாதி என்ன என்பது பற்றி கேட்டது இல்லை.
தலித் வீடுகளில் அரசியல் தலைவர்கள் உணவு அருந்துவதால் மட்டுமே தீண்டாமை ஒழிந்துவிடும் என்பதும் சரியல்ல.
பெயரளவிற்கு அவர்களது வீடுகளுக்குச் சென்று உணவு உண்பதை விடுத்து, அவர்களின் அத்தியாவசிய தேவைகளான கல்வி போன்றவற்றை மேம்படுத்தவும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் முயற்சிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். #Untouchability #RamVilasPaswan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X