search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்கத்தில் இடி மின்னலுடன் கனமழை- 4 பேர் உயிரிழப்பு
    X

    மேற்கு வங்கத்தில் இடி மின்னலுடன் கனமழை- 4 பேர் உயிரிழப்பு

    மேற்கு வங்க மாநிலத்தில் இடி மின்னலுடன் பெய்த கன மழை காரணமாக 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.#RainDeath #HeavyRainKills
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இன்று காலை 4 மணி நேரம் தொடர் கன மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த இந்த மழையால் சாலைகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது. சில பகுதிகளில் மழையால் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன.

    இந்த திடீர் மழையின்போது வெவ்வேறு பகுதிகளில் 3 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் சகர்திகி எனும் பகுதியில் கன மழையினால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #RainDeath #HeavyRainKills
    Next Story
    ×