என் மலர்
செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ரஜோரி பகுதியில் ஊடுருவிய 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் ஊடுருவிய 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் இன்று மாலை சுட்டுக் கொன்றனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள சந்தர்பானி கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற மாநில போலீசார், ராணுவம் மற்றும் பாரா மிலிட்டரி வீரர்கள் அடங்கிய பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடி மருந்துகள் அடங்கிய பைகள் கைப்பற்றப்பட்டது என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Tamilnews
Next Story