என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்க்கண்ட்டில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படை அதிரடி
Byமாலை மலர்26 Feb 2018 6:34 AM GMT (Updated: 26 Feb 2018 6:34 AM GMT)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது நக்சலைட்டுகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நக்சலைட்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுப் படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தேடுதல் வேட்டையின்போது பல நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாலமு மாவட்டம் நவ்திகா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் மற்றும் மாநில போலீசார் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பிற்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நடந்தது.
இந்த சண்டையில் இரண்டு பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். சண்டை முடிவடைந்ததும் நடந்த தேடுதல் வேட்டையின்போது இவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பகுதியில் இருந்து 2 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. #tamilnews
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நக்சலைட்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுப் படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தேடுதல் வேட்டையின்போது பல நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாலமு மாவட்டம் நவ்திகா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் மற்றும் மாநில போலீசார் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பிற்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நடந்தது.
இந்த சண்டையில் இரண்டு பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். சண்டை முடிவடைந்ததும் நடந்த தேடுதல் வேட்டையின்போது இவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பகுதியில் இருந்து 2 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X