என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
காஷ்மீரில் மத்திய ரிசர்வ் படையினர் மீது கையெறி குண்டுவீச்சு: 2 வீரர்கள் உள்பட 4 பேர் காயம்
By
மாலை மலர்3 Feb 2018 9:30 PM GMT (Updated: 3 Feb 2018 9:30 PM GMT)

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் படையினர் மீது கையெறி குண்டு வீசியதில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலத்த காயமடைந்தனர். மேலும் பொதுமக்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட டிராலுக்கு அருகே, படாகுண்ட் என்ற பகுதியில் நேற்று பிற்பகல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்.) ரோந்து பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் சிலர் அந்த வீரர்கள் மீது கையெறி குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பி ஓடினர்.
இந்த குண்டு வெடித்ததில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலத்த காயமடைந்தனர். மேலும் பொதுமக்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் பலர் காயமடைந்ததாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு படையினரும், மாநில போலீசாரும் இணைந்து அப்பகுதியை சுற்றி வளைத்தனர். பின்னர் தப்பி ஓடிய பயங்கரவாதிகளை வேட்டையாடும் நோக்கில் அங்கு தீவிர தேடும் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசிய சம்பவம் தெற்கு காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட டிராலுக்கு அருகே, படாகுண்ட் என்ற பகுதியில் நேற்று பிற்பகல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்.) ரோந்து பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் சிலர் அந்த வீரர்கள் மீது கையெறி குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பி ஓடினர்.
இந்த குண்டு வெடித்ததில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலத்த காயமடைந்தனர். மேலும் பொதுமக்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் பலர் காயமடைந்ததாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு படையினரும், மாநில போலீசாரும் இணைந்து அப்பகுதியை சுற்றி வளைத்தனர். பின்னர் தப்பி ஓடிய பயங்கரவாதிகளை வேட்டையாடும் நோக்கில் அங்கு தீவிர தேடும் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசிய சம்பவம் தெற்கு காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
