search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்தார் படேலின் பங்களிப்பை மறைக்க முயற்சி: காங்கிரசை மறைமுகமாக சாடிய மோடி
    X

    சர்தார் படேலின் பங்களிப்பை மறைக்க முயற்சி: காங்கிரசை மறைமுகமாக சாடிய மோடி

    சர்தார் படேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஒற்றுமை ஓட்டத்தை தொடங்கி வைத்த மோடி, படேலின் பங்களிப்பை புறக்கணிக்க முயற்சி நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சியின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்தார்.
    புதுடெல்லி:

    சர்தார் படேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஒற்றுமை ஓட்டத்தை தொடங்கி வைத்த மோடி, படேலின் பங்களிப்பை புறக்கணிக்க முயற்சி நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சியின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்தார்.

    சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியுமான சர்தார் வல்லபாய் படேலின் 132-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள தயான்சந்த் மைதான வளாகத்தில் ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது. இந்த ஓட்டத்தை கொடியசைத்த தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சர்தார் படேலின் பங்களிப்பை புறக்கணிக்கவும், மறைக்கவும் முயற்சி நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக தாக்கி பேசினார்.

    மேலும், ஒவ்வொரு இந்தியரும் நாட்டுக்கு சேவையாற்ற உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் பேசினார். இந்த ஒற்றுமை ஓட்டத்தில் நுற்றுக்கணக்கான மாணவர்கள், ஒலிம்பிக் நட்சத்திரம் தீபா கமார்கர் உள்ளிட்ட பல விளையாட்டு பிரமுகர்கள் பங்கேற்று சிறிது தூரம் ஓடினர்.
    Next Story
    ×